அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மருங்கு

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  மருங்கு

பொருள்

  • பக்கம்.
  • உடல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.

சிலப்பதிகாரம்

கருத்து உரை

இருபக்கமும் வண்டுகள் மிக்கொலிக்க, அழகிய பூவாடையைப் போர்த்து கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தாயாகலால், காவேரி நீ வாழ்வாயாக; அங்ஙனம் நடந்த செயல் எல்லாம், நின் கணவனது திருந்திய செங்கோல் வளையாமையே  அறிந்தேன் வாழி காவேரி.

 

  • இன்று ஆடிப் பெருக்கு.
  • கரை புரண்டு ஓடும் காவிரியினைக் கண்ட நாம் அடுத்த தலைமுறையும் அவ்வாறு காண இறையிடம் பிராத்தனை செய்வோம்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply