தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஅறையணிநல்லூர்
- அகழி அமைப்புடைய கருவறையில் மிகப்பழமையான சுயம்பு மூலவர்
- அரை + அணி – பாறை + அழகு – பாறையில் அழகாக அமர்ந்திருப்பவர்
- தனிச்சன்னிதியில், திருஞானசம்பந்தர் தாளமேந்தி நின்ற கோலத்தில்
- சமணர்கள் இக்கோயில் கதவை அடைத்து திருஞானசம்பந்தரை நுழைய விடாமல் தடுத்த போது, அவர் பதிகம் பாடி கதவை திறந்த தலம்.
- சம்பந்தர் சிவனாரை தரிசிக்க வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடதுபுறமாகவும் சற்று சாய்ந்த அமைப்பு
- சம்பந்தர் இங்கிருந்தே திருவண்ணாமலையை தரிசித்த தலம். (அடையாளமாக கொடிமரத்தின் அருகே 3 அடி உயர பீடத்தில் சம்பந்தரின் பாதம் )
- ரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள் ஆணையிட்ட தலம்
- திருக்கோயிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமி இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
- சனீஸ்வரர், காகத்தின் மீது காலை ஊன்றிய கோலம் , நின்ற கோலம் என இரு வடிவங்களில் காட்சி
- பீமன் குளம் – கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில்
- மூர்த்தங்கள் அற்று ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக்கோயில்களாக ஐந்து அறைகள்
- மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சன்னதி – ஸ்ரீதேவி கையில் முத்திரை பதித்த தண்டம் , இடப்புறத்தில் பெண், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஆண்.
தலம் | திருஅறையணிநல்லூர் |
பிற பெயர்கள் | அறையணி நல்லூர், அரகண்ட நல்லூர் |
இறைவன் | அதுல்யநாதேஸ்வரர், ஒப்பிலாமணீஸ்வரர் , அறையணிநாதர் |
இறைவி | சௌந்தர்ய கனகாம்பிகை , அருள் நாயகி , அழகிய பொன்னம்மை |
தல விருட்சம் | வில்வமரம் |
தீர்த்தம் | தென்பெண்ணையாறு |
விழாக்கள் | வைகாசியில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம் |
மாவட்டம் | விழுப்புரம் |
திறந்திருக்கும் நேரம் / முகவரி | காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம் அரகண்டநல்லூர் அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம், PIN – 605752 04153-224745, 93456-60711, 99651-44849 |
வழிபட்டவர்கள் | நீலகண்டமுனிவர் , கபிலர், பஞ்ச பாண்டவர்கள், பிரசண்டமுனிவர், மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர், இராமலிங்க சுவாமிகள் |
பாடியவர்கள் | திருஞானசம்பந்தர் |
நிர்வாகம் | |
இருப்பிடம் | திருக்கோயிலூர் – விழுப்புரம் சாலையில் திருக்கோயிலூரில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவு,
விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவு |
இதர குறிப்புகள் | தேவாரத் தலங்களில் 202 வது தலம் நடு நாட்டுத் தலங்களில் 12 வது தலம். |
அழகிய பொன்னம்மை உடனாகிய அதுல்யநாதேஸ்வரர்
புகைப்படங்கள் : தினமலர்
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 77
திருமுறை எண் 3
பாடல்
என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் றாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.
பொருள்
எலும்பு மாலையை அணிந்தவர்; கனலும் சூலத்தை ஏந்தியவர்; சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர்;. தலையின் பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினை உடைய தலைக்கோலம் உடையவர்; பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 77
திருமுறை எண் 5
பாடல்
தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயன லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.
பொருள்
தீப்போல விளங்கும் செம்மேனி உடைவயனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவன்! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக் கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் அழித்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
மிக்க நன்றி அண்ணா. அனைத்தும் குரு அருள்.
தீயினை கையினில் ஏந்தியவன் என்று பொருள் – சிவனின் 5 தொழில்களில் அழித்தலை குறிக்கும்.
Nalla iraipani matrum arapani
You get to learn new things
What is the significance of
: Analy Kaiyil enthiyavane: